search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹர்திக் பாண்டியா"

    நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் ஹர்திக் பாண்டியா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோரை சஸ்பெண்ட் செய்துள்ளதால் சிட்னி போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். #HardikPandya
    இந்தி சினிமா பட டைரக்டர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் ‘காபி வித் கரண்’ டெலிவி‌ஷன் நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஹர்திக் பாண்டியா, லோகேஷ் ராகுல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் பெண்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்தனர். பாலியல் தொடர்பாகவும் வெளிப்படையாக பேசினர். இதற்கு கடும் கண்டனம் எழுந்தது. கருத்துக்கு சமூக வலைத்தளங்களிலும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

    இது தொடர்பாக இருவரும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பிசிசிஐ-யின் நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் நோட்டீஸ் அனுப்பினார். ஹர்திக் பாண்டியா உடனடியாக மன்னிப்பு கேட்டு மெயில் அனுப்பினார். லோகேஷ் ராகுல் கடிதம் அனுப்பினார்.



    ஆனால் அவர்கள் விளக்கம் வினோத் ராய்-ஐ திருப்திப் படுத்தவில்லை. இதனால் இரண்டு போட்டிகளில் விளையாட தடைவிதிக்க பரிந்துரை செய்தார். அதேவேளையில் மற்றொரு நிர்வாகக்குழு உறுப்பினரான டயானா எடுல்ஜி, ‘‘சிஇஓ விவகாரத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டதோ, அதே முடிவை எடுக்க வேண்டும். விசாரணை முடியும் வரை சஸ்பெண்ட் செய்வதே சிறந்ததாக இருக்கும்’’ என்று கூறினார்.



    இந்நிலையில் ‘‘இருவர் மீதான விசாரணை முடிவடையாததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்’’  என்று வினோத் ராய் தெரிவித்துள்ளார். இதனால் நாளை சிட்னியில் தொடங்கும் முதல் ஒருநாள் போட்டியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். விசாரணை முடிவடையாததால் இருவரும் உடனடியாக இந்தியா திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    பெண்கள் குறித்த சர்ச்சை கருத்து விவகாரத்தில் ஹர்திக் பாண்டியா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு தலா இரணடு போட்டியில் விளையாட தடைவிதிக்க வாய்ப்புள்ளது.
    புதுடெல்லி:

    இந்திய கிர்க்கெட் வீரர்கள் ஹர்த்திக் பாண்டியா, லோகேஷ் ராகுல் ஆகியோர் தொலைக்காட்சி பேட்டியின்போது பெண்கள் குறித்து தவறான வகையில் கருத்து கூறியதால் சர்ச்சை எழுந்தது.

    இதுதொடர்பாக கிரிக்கெட் வாரியம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. பாண்டியா இதற்காக மன்னிப்பு கேட்டு விளக்கம் அளித்திருந்தார்.

    பாண்டியாவின் விளக்கம் தனக்கு திருப்திகரமான இல்லை என்று கூறிய நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய், ‘‘பெண்கள் குறித்து சர்ச்சையாக தெரிவித்த பாண்டியா, ராகுலுக்கு 2 ஒருநாள் போட்டியில் விளையாட தடைவிதிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளேன்’’ என்றார். மேலும்,‘‘நிர்வாகக்குழுவின் மற்றொரு அதிகாரியான டயானா எடுல்ஜி-யின் கருத்தை பொறுத்து இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்’’ என வினோத் ராய் தெரிவித்துள்ளார்.
    ×